என் தனிமைக்கு விடை கொடுத்த அன்புத் தோழி ,
இரவு பயணங்களில் என் இமை மூடும் வரை
என்னுடன் வரும் என்னுயிர் தோழி ,
வானத்தில் எரியும் ஜிரோ வாட்ஸ் பல்பு
என்று என்னுள் வார்த்தைகளை விதைத்து
என்னை கவிஞன் ஆக்கிய காவியத் தோழி,
என் இறுதிப் பயணத்தில் என் சிதை எரியும் வரை
இடுகாடு வரை வந்து விடை கொடுக்கும்
பிரியமான தோழி ....................