Tuesday 18 March 2008

பிரியமான தோழி


என் தனிமைக்கு விடை கொடுத்த அன்புத் தோழி ,

இரவு பயணங்களில் என் இமை மூடும் வரை

என்னுடன் வரும் என்னுயிர் தோழி ,

வானத்தில் எரியும் ஜிரோ வாட்ஸ் பல்பு

என்று என்னுள் வார்த்தைகளை விதைத்து

என்னை கவிஞன் ஆக்கிய காவியத் தோழி,

என் இறுதிப் பயணத்தில் என் சிதை எரியும் வரை

இடுகாடு வரை வந்து விடை கொடுக்கும்

பிரியமான தோழி ....................



எரிமலை


நீ வீசிச் சென்ற உன் முதல் பார்வை ,
இன்னும் எனக்குள் குமுறிக் கொண்டு இருக்கிறது ,
எரிமலையாய் !

Saturday 15 March 2008

மரண அஞ்சலி


என் மரண அஞ்சலிக்காக செலுத்தப்படும் கண்ணீர் துளிகளின்
முதல் துளி உனதாகத்தான் இருக்க வேண்டும்......

கடைசி நிமிடங்கள்

என் மரணப் படுக்கையின் கடைசி நிமிடங்களிள்
என் நினைவுகளை தட்டும் முதல் நபர்
நீ இன்றி யாரும் இல்லை........